என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 7 மாணவர்களுக்கு கொரோனா
Byமாலை மலர்20 Sep 2021 10:36 AM GMT (Updated: 20 Sep 2021 12:38 PM GMT)
திருப்பூரில் 44 மாணவ மாணவிகள் மற்றும் 6 ஆசிரியர்கள் என 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் இன்று மாநகர பகுதியில் உள்ள வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் 4 மாணவிகளுக்கும், வெள்ளகோவில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் 2 மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் என 7 மாணவர்களுக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அந்த பள்ளிகளை 3 நாட்கள் மூட கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.
திருப்பூர் மாவட்டத்தில் தற்போது வரை மாநகரப் பகுதிகளில் நெசவாளர் காலனி மேல்நிலைப்பள்ளி ,சின்னசாமி அம்மாள் மேல்நிலைப்பள்ளி ,வீரபாண்டி மேல்நிலைப்பள்ளி மற்றும் மாவட்டத்தில் சேவூர், வெள்ளக்கோவில், பொங்கலூர், பெதப்பம்பட்டி, மூலனூர் என அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 10, 11,12ம் வகுப்பு மாணவர்கள் என 44 மாணவ மாணவிகள் மற்றும் 6 ஆசிரியர்கள் என 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X