search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ரேஷன் கடை பணியாளரிடம் நகை திருட்டு

    போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர் யாரென்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
    உடுமலை:

    உடுமலை போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் பிரேமா(வயது 43). இவர் மடத்துக்குளம் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 15-ந்தேதி நகையை அடகு வைப்பதற்காக நீலாம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு  சென்றார்.

    உடுமலை நூலகம் அருகே பஸ் ஏறி மத்திய பஸ் நிலையம் சென்றடைந்தார். அப்போது அவர் வைத்திருந்த பர்சை காணவில்லை. அதில் 5 பவுன் நகை இருந்தது. மர்மநபர்கள் யாரோ அதனை திருடி சென்று விட்டனர்.

    இதுகுறித்து பிரேமா உடுமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர் யாரென்று விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×