search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புகையிலை பொருட்கள் விற்ற மளிகை வியாபாரி கைது

    மடத்துக்குளம் பகுதி கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    மடத்துக்குளம்:

    மடத்துக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மளிகை கடையில் சட்டவிரோதமாக புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து போலீசார் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது குமாரசாமி ( வயது 50) என்பவர் அவரது கடையில் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 310 கிராம் எடையுள்ள 31 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×