என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளகோவில், மூலனூரில் சூரியகாந்தி விதை - பருத்தி ஏலம்
Byமாலை மலர்18 Sep 2021 8:11 AM GMT (Updated: 18 Sep 2021 8:11 AM GMT)
ஈரோடு, பூனாட்சி, காரமடை, காங்கயம், முத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து 8 வணிகர்கள் சூரியகாந்தி விதை வாங்குவதற்காக வந்திருந்தனர்.
வெள்ளக்கோவில்:
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் ரூ.52.58 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை நடைபெற்றது. ஏலத்துக்கு கரியாம்பட்டி, கொத்தயம், குப்பணவலசு, வாகரை, வடபருத்தியூர், லக்கமநாயக்கன்பட்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து 134 விவசாயிகள் 1,897 மூட்டைகளில் 93,113 கிலோ சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
ஈரோடு, பூனாட்சி, காரமடை, காங்கயம், முத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து 8 வணிகர்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனர். கிலோ ரூ.51 முதல் ரூ.61.16 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.56.30. மொத்தம் ரூ.52 லட்சத்து 58 ஆயிரத்து 983க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர்மாரியப்பன் தெரிவித்தார்.
மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் கடந்த வாரத்தை விட பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்ந்தது.
ஏலத்துக்கு திருச்சி, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 320 விவசாயிகள் 3,197 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மொத்த வரத்து 1,035 குவிண்டால். திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 15 வணிகர்கள் இவற்றை கொள்முதல் செய்ய வந்திருந்தனர்.
குவிண்டால் ரூ.6,900 முதல் ரூ.8,575 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.7,550 ஆகும். மொத்தம் ரூ. 76 லட்சத்து 65 ஆயிரத்து 590க்கு விற்பனை நடைபெற்றது. கடந்த வாரத்தை விட 100 குவிண்டால் வரத்து குறைந்த நிலையில் விலை ரூ.200 அதிகரித்து விற்பனையானது.
ஏல ஏற்பாடுகளை திருப்பூர் விற்பனைக் குழு முதுநிலை செயலாளர் பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X