search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தர்மபுரியில் அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    தர்மபுரி மாவட்ட அஞ்சல் ஊழியர் சங்கங்களின் கூட்டு போராட்ட குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட அஞ்சல் ஊழியர் சங்கங்களின் கூட்டு போராட்ட குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட செயலாளர் தென்னரசு தலைமை தாங்கினார். 

    பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பாபு, மனோகரன், தனஞ்செயன், சிவகுமார், சின்னபையன், தமிழ் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தர்மபுரி தலைமை தபால் நிலையத்தில் காலியாக உள்ள உதவி கணக்காளர் பணியிடத்தை உடனடியாக நிரப்ப வேண்டும். தினந்தோறும் சிறப்பு மேளாக்கள் நடத்துவதை கைவிட வேண்டும். 

    அலுவலக இணையதளத்தில் ஏற்படும் குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
    Next Story
    ×