என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடுமலையில் செக்யூரிட்டி ஏஜென்சி உரிமையாளரிடம் நூதன முறையில் பணம் திருட்டு
Byமாலை மலர்17 Sep 2021 10:09 AM GMT (Updated: 17 Sep 2021 10:09 AM GMT)
காரை குட்டை திடலில் நிறுத்திவிட்டு நடந்து வங்கிக்கு சென்றார். பின்னர் பணப்பையுடன் காருக்கு திரும்பி வந்த வெங்கடேசன் பணப்பையை காரின் பின் இருக்கையில் வைத்தார்.
உடுமலை:
உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 45). செக்யூரிட்டி ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் பூலாங்கிணறிலிருந்து உடுமலைக்கு காரில் வந்தார்.
காரை குட்டை திடலில் நிறுத்திவிட்டு நடந்து வங்கிக்கு சென்றார்.
பின்னர் பணப்பையுடன் காருக்கு திரும்பி வந்த வெங்கடேசன் பணப்பையை காரின் பின் இருக்கையில் வைத்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வெங்கடேசனிடம் காரில் இருந்து ஆயில் கசிவதாக கூறினார். இதை நம்பி வெங்கடேசன் காரை பார்த்தார். ஆனால் ஆயில் ஏதும் கசியவில்லை. இதையடுத்து காரை அங்கிருந்து ஓட்டி சென்றார்.
சிறிது தூரம் சென்ற பின்பு பின் இருக்கையில் பணப்பை இருக்கிறதா என்று பார்த்த போது பணப்பையை காணவில்லை. காரில் ஆயில் கசிவதாக கூறி திசைதிருப்பி விட்டு பணப்பையை அந்த வாலிபர் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் உடுமலை குற்றப்பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்தையா வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திருடு போன பையில் ரூ.25 ஆயிரம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X