என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மடத்துக்குளத்தில் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்15 Sep 2021 9:52 AM GMT (Updated: 15 Sep 2021 9:52 AM GMT)
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வூதிய விதிகள்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
உடுமலை:
மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா தலைமை வகித்தார்.
தலைவர் கண்ணம்மாள், செயலாளர் பொன்னுத்தாய், பொருளாளர் கமலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார். மேலும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மின்னல்கொடி, உமாபதி, ஈஸ்வரன், முன்னாள் செயலாளர் மாவளப்பன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வூதிய விதிகள்படி குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். குடும்ப நல நிதி ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். மருத்துவப்படி மாதம் ரூ.300 மற்றும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X