என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு ஆஸ்பத்திரிகளில் குழந்தைகள் நலப்பிரிவு தயார் நிலையில் இருக்க வேண்டும் - கலெக்டர் அதிரடி உத்தரவு
Byமாலை மலர்15 Sep 2021 8:06 AM GMT (Updated: 15 Sep 2021 8:06 AM GMT)
சுகாதாரத்துறையினர், கொரோனா பரிசோதனை நடவடிக்கையை மேலும் அதிகப்படுத்த வேண்டும்.
திருப்பூர்:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் வினீத் பேசியதாவது:-
கொரோனா பாதிப்பு நீங்கி விட்டதாக யாரும் நினைத்துவிடக்கூடாது. வீட்டில் இருந்து வெளியே வரும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள ஜவுளிக்கடைகள், வணிக வளாகங்களில் தொற்று தடுப்பு நடவடிக்கையை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஓட்டல்களில் பணியாற்றும் அனைவரும் முககவசம் அணிந்திருக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
சுகாதாரத்துறையினர், கொரோனா பரிசோதனை நடவடிக்கையை மேலும் அதிகப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார்நிலையில் இருக்க வேண்டும். குழந்தைகள் நலப்பிரிவுகள், போதிய மருந்து, மாத்திரைகளுடன் தயார்நிலையில் இருக்க வேண்டும்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சர்க்கரை, உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாது, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X