என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் அருகே பயணிகள் நிழற்குடையை பாராக மாற்றிய குடிமகன்கள்
Byமாலை மலர்15 Sep 2021 6:51 AM GMT (Updated: 15 Sep 2021 6:51 AM GMT)
அவரப்பாளையம் நிழற்குடையில் குடிமகன்கள் குடித்து விட்டு கண்ணாடி பாட்டில்கள்,டம்ளர்கள் உள்ளிட்டவற்றை, போட்டுச் செல்கின்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையத்தில் பயணிகள் நிழற்குடை அமைந்துள்ளது.
அந்த நிழற்குடையில், குடிமகன்கள் குடித்து விட்டு கண்ணாடி பாட்டில்கள், டம்ளர்கள், உள்ளிட்டவற்றை போட்டுச் செல்கின்றனர். இதனால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
அவரப்பாளையம் நிழற்குடையில் குடிமகன்கள் குடித்து விட்டு கண்ணாடி பாட்டில்கள், டம்ளர்கள் உள்ளிட்டவற்றை, போட்டுச் செல்கின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தோம். போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்தனர்.
ஆனாலும் குடிமகன்களின் பிடியிலேயே இன்னும் நிழற்குடை உள்ளது. மேலும் நிழற்குடை கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன. எனவே நிழற்குடையை பராமரித்து குடிமகன்களிடம் இருந்து மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X