என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் குவிவதால் கொரோனா பரவும் அபாயம்
Byமாலை மலர்12 Sep 2021 9:37 AM GMT (Updated: 12 Sep 2021 9:37 AM GMT)
விடுமுறை தினமான இன்று தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைவாகவே இருந்தது.
திருப்பூர்:
திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதோடு சந்தைக்கு உள்புறம் மற்றொரு பகுதியில் மீன் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன.
சென்னை, தூத்துக்குடி, ஆந்திரா, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன. விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட கூடுதலான டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
அந்த வகையில் விடுமுறை தினமான இன்று தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் விலை அதிகரித்து காணப்பட்டன. ஆனால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.
வெள்ளியங்காடு, பட்டுக்கோட்டையார் நகர், காட்டுவளவு, பெரியார் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் மீன்களை வாங்கி சென்றனர். மீன் மார்க்கெட்டில் பொது மக்கள் அதிகளவில் கூடிய தால் சமூக இடைவெளி பின்பற்றபடவில்லை.
இதேபோல் ஆடு, மாடு ,கோழி இறைச்சி கடைகளில் சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள் குவிந்தனர். இதனால் கொரோனா பரவும் நிலை உள்ளது. எனவே சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X