என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டாக்டர்களுக்கு கொரோனா-அவிநாசி அரசு ஆஸ்பத்திரியில் தூய்மைப்பணிகள் தீவிரம்
Byமாலை மலர்12 Sep 2021 9:28 AM GMT (Updated: 12 Sep 2021 9:28 AM GMT)
அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சையில் இருந்த நோயாளிகள் அனைவரும் வேறு மருந்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
அவினாசி:
அவினாசி தாலுகா அலுவலகம் அருகில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதில் சித்த மருத்துவ பிரிவும் உள்ளது. அவினாசி சுற்றுவட்டாரப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் இங்கு வந்து சிகிச்சை பெறுவார்கள்.
இந்த நிலையில் அவினாசி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவர்கள் 2 பேர் மற்றும் சித்த மருத்துவர் ஒருவர், சமையலர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
எனவே அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சையில் இருந்த நோயாளிகள் அனைவரும் வேறு மருந்துவமனைக்கு மாற்றப்பட்டதுடன் அவினாசி அரசு மருத்துவமனை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. அத்துடன் 3 நாட்களுக்கு அரசு மருத்துவமனை செயல்படாது என சுகாதாரத்துறையினர் அறிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X