search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுமைப்பணி தொழிலாளர்கள்
    X
    சுமைப்பணி தொழிலாளர்கள்

    சுமைப்பணி தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு 3ம் கட்ட பேச்சுவார்த்தை-நாளை நடக்கிறது

    தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க சரக்கு போக்குவரத்து சங்கம் ,ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
    திருப்பூர்:

    திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடை ரகங்களை லாரி புக்கிங் அலுவலகங்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பிவைக்கின்றன. லாரி புக்கிங் அலுவலகங்களில் சரக்கு ஏற்றுவது, இறக்குவது உள்ளிட்ட சுமைப்பணிகளில் ஏராளமான சுமைபணி தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

    இந்த தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க சரக்கு போக்குவரத்து சங்கம், ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இருதரப்பினரும் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தி முடித்துள்ளனர்.

    சுமைபணி தொழிலாளருக்கு 50 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பது தொழிற்சங்கங்களின் கோரிக்கை. ஆனால் 10 சதவீதம் வரை உயர்வு மட்டுமே வழங்க முடியுமென சரக்கு போக்குவரத்து சங்கம் கூறுகிறது. இதற்கு தொழிற்சங்கங்கள் உடன்படவில்லை.

    இதனால் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்ட முடியவில்லை. 3-வது  சுற்று கூலி உயர்வு பேச்சுவார்த்தை நாளை 13-ந்தேதி ராம் நகரில் உள்ள பி.சி.சி., டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    சரக்கு போக்குவரத்து சங்கம் எத்தனை சதவீத சம்பள உயர்வு வழங்க முன்வருகிறது. அந்த விகிதம் தொழிற்சங்கம் தரப்புக்கு திருப்தி அளிக்கிறதா என்பதை சார்ந்து நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிகிறது.
    Next Story
    ×