search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.
    X
    ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.

    அவினாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    டெல்லியில் காவல்துறையில் பணிபுரிந்த இளம்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    அவினாசி:

    திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் மற்றும் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், டெல்லியில் காவல்துறையில் பணிபுரிந்த இளம்பெண்ணை பாலியல் வல்லுறவு செய்ததை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவினாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட குழு உறுப்பினர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட குழு உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி சண்முகம், பாலசுப்பிரமணி, ராஜன், தேவி வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×