என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லோக் அதாலத் மூலம் ரூ.1 கோடி இழப்பீடு தொகை
Byமாலை மலர்11 Sep 2021 8:58 AM GMT (Updated: 11 Sep 2021 8:58 AM GMT)
கடந்த 2017-ம் ஆண்டு இரு சக்கரவாகனமும், பொக்லைன் எந்திரமும் மோதி கொண்டதில் அரவிந்த் என்ற வாலிபர் கை, கால்கள் செயல் இழந்து வாய் பேச முடியாமல் பாதிக்கப்பட்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சொர்ணம் நடராஜன் தலைமையில் லோக் அதாலத் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதன் மூலம் பல்வேறு வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
அந்தவகையில் கடந்த 2017-ம் ஆண்டு இரு சக்கரவாகனமும், பொக்லைன் எந்திரமும் மோதி கொண்டதில் அரவிந்த் என்ற வாலிபர் கை, கால்கள் செயல் இழந்து வாய் பேச முடியாமல் பாதிக்கப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று லோக் அதாலத் மூலம் சமரச தீர்வு காணப்பட்டது. அதன்படி அரவிந்திற்கு இன்சூரன்ஸ் மூலம் ரூ.47 லட்சம் இழப்பீட்டு தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.
இதேபோல் திருப்பூரை சேர்ந்த விஜயகார்த்திக் என்ற போலீஸ்காரர் சென்னையில் பணியாற்றி வந்த போது ஏற்பட்ட விபத்தில் பலியானார். இந்த வழக்கிற்கும் சமரச தீர்வு காணப்பட்டு விஜயகார்த்திக் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையாக ரூ.60 லட்சம் வழங்கப்பட்டது.
இதற்கான காசோலையை விஜயகார்த்திக் குடும்பத்தினரிடம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சொர்ணம் நடராஜன் வழங்கினார். லோக் அதாலத் மூலம் சமரச தீர்வு காணப்பட்டு இன்று மொத்தம் ரூ.1 கோடியே 7 லட்சம் இழப்பீட்டு தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X