என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெங்கிடுபதி எத்தலப்பருக்கு ரூ.2.60 கோடியில் திருவுருவச்சிலை - முதல்வருக்கு பாராட்டு
Byமாலை மலர்9 Sep 2021 10:02 AM GMT (Updated: 9 Sep 2021 10:19 AM GMT)
ஆங்கிலேயனை தூக்கிலிட்ட முதல் சுதேச வீரர்கள் வரிசையில் வெங்கிடுபதி எத்தலப்பர் இருந்துள்ளார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டத்தில், ஆங்கிலேயரை தூக்கிலிட்ட முதல் சுதந்திர போராட்ட வீரர் தளி பாளையக்கார மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பருக்கு ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் அரங்கம் மற்றும் திருவுருவச்சிலை அமைப்பதற்கு சட்டப்பேரவையில் தமிழக முதல்-அமைச்சர் அறிவித்தார்.
இந்தியர்களை தூக்கில் இட்டும், துப்பாக்கியால் சுட்டும் கொன்றவர்கள் ஆங்கிலேயர்கள். ஆனால் ஆங்கிலேயர் ஒருவருக்கே தூக்குத் தண்டனை நிறைவேற்றிய ஓர் குறுநில மன்னர் தளி பாளையக்கார மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர்.
ஆங்கிலேயனை தூக்கிலிட்ட முதல் சுதேச வீரர்கள் வரிசையில் தளி பாளையக்கார் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பர் இருந்துள்ளார். இதற்கு ஆதாரமாக திருமூர்த்தி அணை அருகே கல்வெட்டுக்கள் உள்ளது.
எத்தலப்பருக்கு அரசு நினைவாக மணிமண்டபம் அமைக்க வேண்டும் என 2014 ம் ஆண்டு முதல் தமிழக அரசிற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசீலினை செய்து கடந்த 7-ந்தேதி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.
இதனால் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கும் உடுமலை வரலாற்று ஆய்வு மையம் மற்றும் திருப்பூர் மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X