என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவையில் ரூ.7 லட்சம் மதிப்பில் தங்க கட்டி வாங்கி மோசடி - ஊழியர் மீது வழக்கு
கோவை:
கோவை ஆர்.எஸ்.புரம் ராமலிங்கம் ரோட்டை சேர்ந்தவர் மோகனன்(வயது48).
இவர் அதே பகுதியில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
இவரிடம் கடந்த மாதம் 12-ந் தேதி மோகனன் 250 கிராம் தங்கக் கட்டியை கொடுத்து நகை ஆபரணமாக செய்து தருமாறு கொடுத்தார். இதனை பெற்றுக் கொண்ட தங்கராஜ் நகைகளை செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதுகுறித்து மோகனன் அவரிடம் கேட்டபோது தனது உறவினர் இறந்துவிட்டதால் சொந்த ஊருக்கு சென்று விட்டதாக கூறினார்.
பின்னர் வேலைக்கு வந்த அவரிடம் மோகனன் தங்க நகைகளை கொடுக்குமாறு கேட்டார். அதற்கு அவர் 80 கிராம் நகை மட்டும் திருப்பிக் கொடுத்தார் மீதமுள்ள ரூ.7 லட்சம் மதிப்பிலான 170 கிராம் தங்க நகைகளை கொடுக்காமல் மோசடி செய்தார். இதுகுறித்து மோகனன் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தங்கராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்