என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கோரி பிரதமருக்கு மனு அனுப்பும் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்8 Sep 2021 10:13 AM GMT (Updated: 8 Sep 2021 10:13 AM GMT)
நலிவடைந்து வரும் விவசாயத்துறையை காப்பாற்ற விவசாய விளை பொருட்கள் அனைத்திற்கும் இடுபொருள் செலவை கணக்கீட்டு லாபகரமான விலை அறிவிக்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கோரி மத்திய, மாநில அரசை வலியுறுத்தி பிரதமருக்கு மனு அனுப்புதல் மற்றும் அகிலபாரத ஆர்ப்பாட்டம் பாரதிய கிசான் சங்கம் சார்பில் நடைபெற்றது.
இதில் நலிவடைந்து வரும் விவசாயத்துறையை காப்பாற்ற விவசாய விளைபொருட்கள் அனைத்திற்கும் இடுபொருள் செலவை கணக்கீட்டு லாபகரமான விலை அறிவிக்க வேண்டும்.
மேலும் இந்த லாபகரமான விலைக்கு சட்டப்பாதுகாப்பு அளித்து அதன்படி விளைபொருட்களை லாபகரமான விலைக்கு வாங்குமாறு ஆவண செய்ய வேண்டும். பாலை லாபகரமான பொருளாக அறிவித்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
அமராவதி அணையை தூர்வாரி பழைய ஆயக்கட்டு மற்றும் புது ஆயக்கட்டு வாய்க்கால்களை தூர்வார வேண்டும். விவசாயிகள் தங்கள் விளைபொருளை உணர்த்த 100 சென்ட் உளர் களம் பேரூராட்சிக்கு இரண்டும் ஊராட்சிக்கு ஒன்றும் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு பிரதமருக்கு மனுவாக அனுப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X