search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்த நாதர்ஷா.
    X
    தற்கொலை செய்த நாதர்ஷா.

    உடுமலை அருகே கேரள காதல் ஜோடி தற்கொலை முயற்சி-காதலன் சாவு

    தமிழக-கேரள எல்லையான உடுமலை காந்தளூர் அடர்ந்த வனப்பகுதிக்கு இருவரும் சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
    உடுமலை:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம்  மறையூர் பகுதியை சேர்ந்தவர் நிகிலா, ஆசிரியை. இவரும் பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த நாதர்ஷா என்பவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர்.

    இவர்களது காதலுக்கு நாதர்ஷா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவருக்கு வேறொரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்தனர்.

    இதனால் நாதர்ஷாவும், நிகிலாவும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.  இதையடுத்து அவர்கள் தமிழக-கேரள எல்லையான உடுமலை காந்தளூர் அடர்ந்த வனப்பகுதிக்கு இருவரும் சென்றனர். அங்கு  நிகிலா தனது கை நரம்பை பிளேடால் அறுத்துக்கொண்டார். 

    இதில் அவர் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி யடைந்த  நாதர்ஷா தான் வாங்கி வைத்திருந்த மதுவை குடித்து விட்டு அங்குள்ள பாறையின் மேல் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்தநிலையில்  நிகிலா உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  இதையடுத்து மறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிகிலாவை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாதர்ஷா உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து உடுமலை போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.
    Next Story
    ×