search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம்
    X
    விஷம்

    கடையம் அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை

    கடையம் அருகே பல வரன்கள் தடைபட்டதால் விரக்தி அடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    கடையம்:

    கடையம் அருகே உள்ள சேர்வைகாரன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவரது மகன் பிரவீன்குமார் (வயது 29). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணம் நடத்த பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் இவருக்கு பல வரன்கள் தடைபட்டதாக தெரிகிறது.

    இதனால் விரக்தியடைந்த பிரவீன்குமார் வி‌ஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கடையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×