என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்கோட்டையில் தொழிலாளியை தாக்கிய ரவுடி கைது
Byமாலை மலர்5 Sep 2021 9:22 AM GMT (Updated: 5 Sep 2021 9:22 AM GMT)
செங்கோட்டையில் தொழிலாளியை தாக்கிய ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
செங்கோட்டை அருகே உள்ள வல்லத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது42). இவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவர் வல்லத்தை சேர்ந்த சுடலை (37) என்பவரிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக ஆனந்த் வேலைக்கு செல்லவில்லை. இதற்கு காரணம் காளிதாஸ் தான் என்று எண்ணிய சுடலை அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது சுடலை மற்றும் அவரது நண்பர்கள் பார்த்திபன், பாலகன் ஆகியோர் சேர்ந்து காளிதாசை தாக்கி உள்ளனர். இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுடலையை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பார்த்திபன் மற்றும் பாலகனை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சுடலையின் பெயர் ரவுடிகள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X