என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாராபுரம் அருகே என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் மர்மச்சாவு
Byமாலை மலர்3 Sep 2021 10:22 AM GMT (Updated: 3 Sep 2021 10:22 AM GMT)
அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகே சூரியகுமாரின் செருப்பு கிடந்ததை கண்டு மீனாட்சி அதிர்ச்சியடைந்தார். இதைத்தொடர்ந்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தாராபுரம்:
திண்டுக்கல் மாவட்டம் பழனி மேல்கரை பட்டியைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் சூரியகுமார் (வயது21). இவர் கரூர் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் காரணமாக கடந்த ஓராண்டு காலமாக கல்லூரி திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சூரியகுமார் 4-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பை ஆன்லைன் மூலம் படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தாராபுரம் அருகே கொண்டரசம்பாளையத்தில் உள்ள அவரது அத்தை மீனாட்சி வீட்டிற்கு வந்திருந்தார். பின்னர் திடீரென்று சூரியகுமாரை காணவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகே சூரியகுமாரின் செருப்பு கிடந்ததை கண்டு மீனாட்சி அதிர்ச்சியடைந்தார். இதைத்தொடர்ந்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்பு துறையின் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி ஒரு மணி நேரம் போராடி சூரியகுமார் உடலை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X