search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    பரமக்குடியில் அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைக்கும் சட்ட முன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பரமக்குடி காந்தி சிலை அருகில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி ஆலோசனையின் பேரில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைக்கும் சட்ட முன்வடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பரமக்குடி காந்தி சிலை அருகில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் டாக்டர் முத்தையா தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் பாதுஷா, தலைமை கழக பேச்சாளர் ஜமால், நகர் அம்மா பேரவை செயலாளர் வடமலையான், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல் மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கணேசன் வரவேற்றார்.

    இதில் கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர். முன்னதாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மனைவி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் குப்புசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் தங்க வேல், மாவட்ட இலக்கிய அணி தலைவர் நகரம் நல்ல தம்பி, வாணிய வல்லம் ஊராட்சி மன்ற தலைவர் நாகநாதன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×