search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சேவூர் விதைப்பண்ணையில் கலெக்டர் ஆய்வு

    சேவூரில் விதைப்பண்ணை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நிலக்கடலை சான்று விதை பண்ணையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    அவிநாசி:

    அவிநாசியில் வேளாண்துறை சார்பில் செயல்படும் உயிர் உர உற்பத்தி மையத்தில் புதிய தொழில்நுட்பத்தில் திரவ உயிர் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை கலெக்டர் வினீத் பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.

    மேலும் சேவூரில் விதைப்பண்ணை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நிலக்கடலை சான்று விதை பண்ணை, கானூரில் கூட்டு பண்ணை திட்டம் மூலம் 720 விவசாயிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட அவிநாசி கூட்டுப்பண்ணை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மதிப்புக்கூட்டு எந்திர மையத்தின் செயல்பாடு  உள்ளிட்ட பல்வேறு வேளாண் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது வட்டார வேளாண் உதவி இயக்குனர் அருள்வடிவு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×