என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் கனிவாக நடக்க கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தல்
Byமாலை மலர்2 Sep 2021 7:09 AM GMT (Updated: 2 Sep 2021 7:09 AM GMT)
சீருடை அல்லது பள்ளி மற்றும் கல்லூரியில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கண்டக்டரிடம் காண்பிக்க வேண்டும்.
உடுமலை:
தமிழகத்தில் கல்லூரி மற்றும் பள்ளிகளில், 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதையொட்டி கட்டணமில்லா பஸ்பாஸ் வழங்கும் வரை அரசு டவுன் பஸ்களில் மாணவர்கள் இலவசமாக பயணிக்க, அரசு அனுமதி அளித்துள்ளது.
சீருடை அல்லது பள்ளி மற்றும் கல்லூரியில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கண்டக்டரிடம் காண்பிக்க வேண்டும். ஆனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மட்டுமே நடந்துள்ள நிலையில் அவர்களுக்கு நடப்பு ஆண்டுக்கான அடையாள அட்டை வழங்கப்படவில்லை.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக உடுமலை கிளை மேலாளர் மணிகண்டன் கூறுகையில்;
பஸ்சில் சீருடையுடன் பயணிக்கும் மாணவ, மாணவிகளிடம் எக்காரணம் கொண்டும் கடிந்து கொள்ளக்கூடாது. சீருடை மற்றும் அடையாள அட்டை இல்லாதிருந்தால் அவர்களிடம் கனிவான அணுகு முறையும், தேவையான வழிநடத்தலும் அவசியம் என கண்டக்டர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X