search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    புதுக்கடை அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை- போலீசார் விசாரணை

    புதுக்கடை அருகே திருமண ஏக்கத்தில் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுக்கடை:

    தேங்காப்பட்டணம் அருகே வழுதூர் வடக்கு கொன்றைக்காடு பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் டேவிட் ராஜ் (வயது 31), ஆட்டோ டிரைவர்.

    இவருக்கு திருமணம் செய்து வைக்க, குடும்பத்தினர் பெண் பார்த்து வந்தனர். ஆனால் டேவிட் ராஜூக்கு பெண் அமையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மன வேதனையில் இருந்து வந்தார்.

    இந்தநிலையில் டேவிட்ராஜ் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புதுக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டேவிட்ராஜ் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி இன்ஸ்பெக்டர் ராஜசேகர் விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×