என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை குறைவு
Byமாலை மலர்29 Aug 2021 11:22 AM GMT (Updated: 29 Aug 2021 11:22 AM GMT)
கொரோனா பரவல் இருந்தும் அதனை பொருட்படுத்தாமல் மீன் வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படியே உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர்-பல்லடம் சாலையில் உள்ளது தென்னம்பாளையம் மார்க்கெட். இங்குள்ள மீன் சந்தைக்கு தினமும் சென்னை, தூத்துக்குடி, நாகை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமையானால் சந்தையில் மற்ற நாட்களை விட கூட்டம் அலைமோதும். கொரோனா பரவல் இருந்தும் அதனை பொருட்படுத்தாமல் மீன் வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படியே உள்ளது.
இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று சந்தைக்கு மீன்வாங்க ஏராளமானோர் வந்தனர். மீன்கள் விலை குறைந்ததால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியடைந்தனர். பாறை மீன் ரூ.120க்கும், கட்லா மீன் ரூ.160க்கும், சங்கரா ரூ.220க்கும், ரோகு ரூ.130க்கும், விளாங்கு ரூ.120க்கும், ஜிலேபி மீன் ரூ.80க்கும், வஞ்சிரம் ரூ.650க்கும், மத்தி ரூ.160க்கும், இறால் ரூ.420க்கும் விற்பனையானது.
இது குறித்து மீன் வியாபாரிகள் கூறுகையில், கடந்த 2 வாரமாக மீன்கள் விலை குறைவாகவே உள்ளது. இதனால் வியாபாரம் சற்று பாதித்துள்ளது என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X