search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

    தங்கவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிவசெல்வத்தை கைது செய்தனர்.
    உடுமலை:

    குமரலிங்கத்தை அடுத்த கொழுமம் குப்பம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல், தொழிலாளி. இவர் குமரலிங்கம் பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த சிவசெல்வம் என்பவர் தங்கவேலுவை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி உள்ளார். 

    மேலும் பணம் கொடுக்க மறுத்த தங்கவேலுவை கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.1500 பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை சிவசெல்வம் பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். 

    இதுகுறித்து குமரலிங்கம் போலீஸ் நிலையத்தில் தங்கவேல் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிவசெல்வத்தை கைது செய்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர். 
    Next Story
    ×