என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வாளையாறு சோதனை சாவடியில் நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதல் - கிளீனர் பலி
கோவை:
கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் ஆசிக்அலி (வயது 39). மீன் லாரியில் கீளினராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் சென்னையில் இருந்து கேரள மாநிலத்துக்கு மீன்களை ஏற்றி சென்ற லாரியில் சென்றார். லாரியை சென்னையை சேர்ந்த மணிகண்டன் (30) என்பவர் ஓட்டிச் சென்றார். நேற்று இரவு லாரி தமிழக- கேரள எல்லையில் உள்ள வாளையாறுக்கு வந்தது. லாரியை டிரைவர் சோதனை சாவடியில் சோதனைக்காக நிறுத்தி இருந்தார்.
அப்போது அந்த வழியாக கேரள மாநிலத்துக்கு தேயிலை ஏற்றிச் சென்ற லாரி கண்இமைக்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து மீன் லாரியின் பின் பக்கத்தில் மோதியது.
இதில் மீன் லாரி முன்னால் நின்று கொண்டு இருந்த லாரி மீது மோதி நசுங்கியது.
இந்த விபத்தில் லாரி கீளினர் ஆசிக் அலி , டிரைவர் மணிகண்டன் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆசிக் அலி பரிதாபமாக இறந்தார். மணிகண்டன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்