search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூரில் இலவச போட்டோ - வீடியோகிராபி பயிற்சி தொடக்கம்

    பயிற்சி முடிந்து தேர்ச்சி பெறுவோருக்கு மத்திய அரசின் ‘ஸ்கில் இந்தியா’ சான்று வழங்கப்படுகிறது. தொழில் துவங்க கடன் ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூரில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கான இலவச போட்டோ மற்றும் வீடியோகிராபி பயிற்சி தொடங்கியுள்ளது.  

    இங்கு காலை, 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டணம் கிடையாது. காலை, மாலை டீ, மதிய உணவு, பயிற்சி உபகரணங்கள், சீருடை இலவசமாக வழங்கப்படுகிறது. 

    பயிற்சி முடிந்து தேர்ச்சி பெறுவோருக்கு மத்திய அரசின் ‘ஸ்கில் இந்தியா’ சான்று வழங்கப்படுகிறது. தொழில் துவங்க கடன் ஆலோசனையும் வழங்கப்படுகிறது. மொத்தம் 25 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுவரை 19 பேர் இப்பயிற்சியில் இணைந்துள்ளனர். அடுத்த இரண்டு நாட்கள் இப்பயிற்சியில் இணைய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

    கிராமப்புறங்களில் வசிக்கும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர் இணையலாம். ஆதார், ரேஷன்கார்டு, வங்கி கணக்கு புத்தக நகல், பான் கார்டு நகல், 4 பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 86105 33436, 94890 43923 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பயிற்சி மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×