search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    நாய் விரட்டியதால் மொபட் மின் கம்பத்தில் மோதி விபத்து - காவலாளி பரிதாப பலி

    கோவை அருகே மொபட் மின் கம்பத்தில் மோதிய விபத்தில் காவலாளி பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை சவுரிபாளையம் அருகே உள்ள நேதாஜி வீதியை சேர்ந்தவர் பெரியராஜா (வயது 56). காவலாளி. சம்பவத்தன்று இரவு இவர் வேலைக்கு சென்று விட்டு தனது மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

    மொபட் பீளமேடு- சவுரிபாளையம் ரோட்டில் சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த தெரு நாய்கள் மொபட்டை விரட்டியது. நாய்களிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காக பெரிய ராஜா மொபட்டை வேகமாக ஓட்டினார்.

    அப்போது மொபட் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பெரிய ராஜாவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×