என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாய் விரட்டியதால் மொபட் மின் கம்பத்தில் மோதி விபத்து - காவலாளி பரிதாப பலி
Byமாலை மலர்12 Aug 2021 2:32 PM GMT (Updated: 12 Aug 2021 2:32 PM GMT)
கோவை அருகே மொபட் மின் கம்பத்தில் மோதிய விபத்தில் காவலாளி பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை சவுரிபாளையம் அருகே உள்ள நேதாஜி வீதியை சேர்ந்தவர் பெரியராஜா (வயது 56). காவலாளி. சம்பவத்தன்று இரவு இவர் வேலைக்கு சென்று விட்டு தனது மொபட்டில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.
மொபட் பீளமேடு- சவுரிபாளையம் ரோட்டில் சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த தெரு நாய்கள் மொபட்டை விரட்டியது. நாய்களிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்வதற்காக பெரிய ராஜா மொபட்டை வேகமாக ஓட்டினார்.
அப்போது மொபட் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பெரிய ராஜாவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X