search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம்
    X
    விஷம்

    ஒரத்தநாடு அருகே வி‌ஷம் குடித்து அரசு ஊழியர் தற்கொலை

    ஒரத்தநாடு அருகே வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்த அரசு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஒரத்தநாடு:

    ஒரத்தநாடு அருகே உள்ள சின்ன பொன்னாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஸ்வரன் (வயது 60). அரசு கயிறு ஆலையில் கணக்காளராக பணியாற்றி வந்த இவர் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு நாகேஸ்வரனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×