search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    உளுந்தூர்பேட்டை, மேல்மலையனூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

    உளுந்தூர்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதன்காரணமாக உளுந்தூர்பேட்டை நகரம், வெள்ளையூர், எடைக்கல், குமாரமங்கலம், குணமங்கலம், அங்கனூர், வண்டிப்பாளையம், சின்னக்குப்பம், பெரியகுப்பம், நாச்சியார்பேட்டை, காட்டுநெமிலி, பு.மாம்பாக்கம், செம்மணங்கூர், உளுந்தண்டார்கோவில், மதியனூர், செங்குறிச்சி, பாதூர், சேந்தநாடு, எறையூர், நகர், ஆசனூர் மற்றும் அ.சாத்தனூர் பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேல்மலையனூர் அடுத்த தாயனூர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாயனூர், மேல்மலையனூர், மானந்தல், அத்திப்பட்டு, வேலந்தாங்கள், மேல் பாப்பம்பாடி, எய்யில், நல்லாண்பிள்ளைபெற்றாள், உண்ணாமலந்தல், எதப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை செஞ்சி மின்வாரிய செயற்பொறியாளர் சித்ரா தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×