search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி
    X
    நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி

    நீடாமங்கலத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீடாமங்கலத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடந்தது.
    நீடாமங்கலம்:

    நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் ராதா தலைமை தாங்கினார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் தமிழார்வன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர்.

    நீடாமங்கலம் வட்டம் புதுத்தேவங்குடி ஊராட்சியில் சமுதாயக்கரையில் உள்ளவர்களுக்கு குடியிருப்பு மனைப்பட்டா வழங்க வேண்டும். மின்சார வசதி இல்லாதவர்களுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
    Next Story
    ×