என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளஸ்-2 மாணவிக்கு குழந்தை பிறந்தது: கற்பழித்த சக மாணவர் கைது
Byமாலை மலர்5 Aug 2021 5:19 AM GMT (Updated: 5 Aug 2021 5:19 AM GMT)
கோவை மேட்டுப்பாளையத்தில் பிளஸ்-2 மாணவியை கற்பழித்தது தொடர்பாக சக மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த போது அந்த பகுதியில் உள்ள டியூசனுக்கு படிக்க சென்றார்.
அப்போது அந்த டியூசனில் படித்த மாணவர் ஒருவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி சந்தித்து கொண்டதால் இவர்களது பழக்கம் பின்னர் நட்பாக மாறியது.
அப்போது ஒருநாள் மாணவர், மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். மாணவியும் ஏற்றுக்கொண்டார். பின்னர் 2 பேரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறி கொண்டு அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக 2 பேரும் காதலித்து வருகிறார்கள். மேலும் மாணவியை அடிக்கடி வெளியிலும் மாணவர் கூட்டி சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி மாணவியை போனில் தொடர்பு கொண்ட மாணவர் நான் உன்னை பார்க்காமல் இருக்க முடியவில்லை. உடனே உன்னை பார்க்க வேண்டும் என்றார். மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாணவியின் வீட்டின் அருகே வந்த மாணவர், மாணவியை தொடர்பு நான் உன் வீட்டிற்கு வெளியில் தான் நிற்கிறேன். வெளியில் வா உன்னை பார்க்க வேண்டும் என அழைத்தார். மாணவியும் வெளியில் வந்தார். பின்னர் மாணவியை அழைத்து கொண்டு அருகே உள்ள பாழடைந்த வீட்டிற்கு சென்றார்.
அங்கு வைத்து 2 பேரும் தனிமையில் பேசி கொண்டிருந்தனர். அப்போது மாணவர், மாணவியிடம் தான் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபோன்று பலமுறை மாணவியை அதே இடத்திற்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.
எப்படியும் தனது காதலன் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் தனக்கு நடந்த சம்பவத்தை மாணவி பெற்றோரிடம் தெரிவிக்காமலேயே இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த மாணவி திடீரென வாந்தி எடுத்ததுடன், மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியான பெற்றோர் பயத்துடன் மகளை தூக்கி கொண்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், சற்று நேரத்தில் குழந்தை பிறந்து விடும் என கூறி ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆஸ்பத்திரியில் சேர்த்த சிறிது நேரத்திலேயே மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாணவியிடம் பெற்றோர் விசாரித்தபோது, நானும், பிளஸ்-2 மாணவரும் ஒரு வருடமாக காதலித்தோம். அப்போது அந்த மாணவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்னம் வழக்குப்பதிவு செய்து மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கைதான மாணவரும் பிளஸ்-2 படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த போது அந்த பகுதியில் உள்ள டியூசனுக்கு படிக்க சென்றார்.
அப்போது அந்த டியூசனில் படித்த மாணவர் ஒருவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி சந்தித்து கொண்டதால் இவர்களது பழக்கம் பின்னர் நட்பாக மாறியது.
அப்போது ஒருநாள் மாணவர், மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். மாணவியும் ஏற்றுக்கொண்டார். பின்னர் 2 பேரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறி கொண்டு அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக 2 பேரும் காதலித்து வருகிறார்கள். மேலும் மாணவியை அடிக்கடி வெளியிலும் மாணவர் கூட்டி சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 10-ந் தேதி மாணவியை போனில் தொடர்பு கொண்ட மாணவர் நான் உன்னை பார்க்காமல் இருக்க முடியவில்லை. உடனே உன்னை பார்க்க வேண்டும் என்றார். மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாணவியின் வீட்டின் அருகே வந்த மாணவர், மாணவியை தொடர்பு நான் உன் வீட்டிற்கு வெளியில் தான் நிற்கிறேன். வெளியில் வா உன்னை பார்க்க வேண்டும் என அழைத்தார். மாணவியும் வெளியில் வந்தார். பின்னர் மாணவியை அழைத்து கொண்டு அருகே உள்ள பாழடைந்த வீட்டிற்கு சென்றார்.
அங்கு வைத்து 2 பேரும் தனிமையில் பேசி கொண்டிருந்தனர். அப்போது மாணவர், மாணவியிடம் தான் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபோன்று பலமுறை மாணவியை அதே இடத்திற்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி வலுகட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தார்.
எப்படியும் தனது காதலன் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் தனக்கு நடந்த சம்பவத்தை மாணவி பெற்றோரிடம் தெரிவிக்காமலேயே இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த மாணவி திடீரென வாந்தி எடுத்ததுடன், மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியான பெற்றோர் பயத்துடன் மகளை தூக்கி கொண்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.
அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாகவும், சற்று நேரத்தில் குழந்தை பிறந்து விடும் என கூறி ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆஸ்பத்திரியில் சேர்த்த சிறிது நேரத்திலேயே மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாணவியிடம் பெற்றோர் விசாரித்தபோது, நானும், பிளஸ்-2 மாணவரும் ஒரு வருடமாக காதலித்தோம். அப்போது அந்த மாணவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்னம் வழக்குப்பதிவு செய்து மாணவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கைதான மாணவரும் பிளஸ்-2 படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X