என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாராபுரத்தில் 3 கிலோ கலப்பட உணவுகள் அழிப்பு
Byமாலை மலர்30 July 2021 11:21 AM GMT (Updated: 30 July 2021 11:21 AM GMT)
பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்திய 2 கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தாராபுரம் :
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குழுவினர் சிரஞ்சீவி, விஜயராஜா, பாலமுருகன், ரகுநாதன், கோடீஸ்வரன் ஆகியோர் பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, கடைவீதி உட்பட பல பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது தடைசெய்யப்பட்ட உணவு, புகையிலை பொருட்கள், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அனுமதியற்ற செயற்கை வர்ணபொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என சோதனை செய்தனர்.
அப்போது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட உணவு, புகையிலை பொருட்கள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்திய 2 கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் செயற்கை வர்ணம் சேர்க்கப்பட்ட உணவுகள் சுமார் 3 கிலோ கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டது. உணவு பொருட்கள் கலப்படம் பற்றிய புகார்களுக்கு 9444042322 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X