என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொழில்நுட்ப கோளாறால் மின்வெட்டு-கிராமமக்கள் தவிப்பு
Byமாலை மலர்27 July 2021 8:46 AM GMT (Updated: 27 July 2021 8:46 AM GMT)
கடந்த சில நாட்களாக கொங்கல்நகரம் துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின்வெட்டு அதிகரித்துள்ளது.
உடுமலை:
உடுமலை மின்பகிர்மான வட்டத்துக்குட்பட்ட ஆலாமரத்தூர், கொங்கல்நகரம் துணை மின் நிலையங்கள் வாயிலாக 30க்கும் மேற்பட்ட கிராமங்கள், விவசாயம் மற்றும் தொழிற்சாலை மின் இணைப்புகளுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த மே மாதம் ஆலாமரத்தூர் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அப்பகுதி கிராமங்களில் கடுமையான மின்வெட்டு இருந்தது. தற்காலிக தீர்வாக கொங்கல்நகரம் துணை மின் நிலைய மின்பாதை வழியாக அப்பகுதி கிராமங்களுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொங்கல்நகரம் துணை மின்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் மின்வெட்டு அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே விரைவில், ஆலாமரத்தூர், கொங்கல்நகரம் துணை மின் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் சீரான மின் வினியோகத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் மின்வாரிய அமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X