என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கருப்பு பூஞ்சை நோய்க்கு பெண் பலி
நெல்லை:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள செந்தட்டியாபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி மாரியம்மாள் (வயது 54). இவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த மாதம் 26-ந்தேதி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மாரியம்மாள் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவர் கருப்பு பூஞ்சை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் அவருக்கு கரும்பூஞ்சை வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார். ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கரும்பூஞ்சைக்கு பலியாகி இருந்தனர்.
இன்று தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு பெண் உயரிழந்ததால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி கருப்பு பூஞ்சைக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்