என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளி ஸ்மார்ட் வகுப்பறையில் அதிகாரிகள் ஆய்வு
Byமாலை மலர்25 July 2021 7:11 AM GMT (Updated: 25 July 2021 7:11 AM GMT)
உடுமலை கணக்கம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், தயார்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பை திருப்பூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார் பார்வையிட்டார்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சில தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் டிஜிட்டல் தொழில்நுட்பம் வாயிலாக மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
ஸ்மார்ட் வகுப்புகளால் மாணவர்களின் கல்வி மீதான நாட்டம் அதிகரிப்பதாகவும், படங்களைக் காட்டி அவற்றின் பெயர்களை கூறச் செய்தல், மனப்பாடப் பகுதிகளை ராகத்துடன் பாடும் வீடியோக்களை பார்க்கச் செய்தல் உள்ளிட்டவைகளால் உற்சாகம் அடைவதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
உடுமலை கணக்கம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், தயார்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பை திருப்பூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார் பார்வையிட்டார். அப்போது தொடர்ந்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமையாசிரியர் அனுராதா, ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் விளக்கினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X