search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    திடீர் மாரடைப்பு: சதுரகிரி மலைக்கு சென்ற பக்தர் பலி

    ஆடி பவுர்ணமியை முன்னிட்டு, மதுரை மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    திருமங்கலம்:

    ஆடி பிரதோ‌ஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 21-ந் தேதி முதல் 24-ந் தேதி (நாளை) வரை 4 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

    இந்த நிலையில் நேற்று ஆடி பவுர்ணமியை முன்னிட்டு, மதுரை மாவட்டம் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    சதுரகிரி கோவிலில் புதுச்சேரியைச் சேர்ந்த கருணாகரன் (வயது 47), அவரது மனைவி ரேவதி இருவரும் சதுரகிரி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அடிவாரப்பகுதியில் இறங்கிக்கொண்டிருந்தனர்.

    அப்போது கருப்பசாமி கோவில் பகுதியில் கருணாகரனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தகவலறிந்த சாப்டூர் போலீசார் உடலை கைப்பற்றி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×