என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூவானம் அருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்-சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
Byமாலை மலர்24 July 2021 10:21 AM GMT (Updated: 24 July 2021 10:21 AM GMT)
நீர்வரத்தின்றி காய்ந்து கிடந்த துவானம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான மறையூர், மூணாறு, சின்னாறு போன்ற பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பகுதியில் சிறு சிறு அருவிகள் தோன்றி காண்போரை கவர்ந்து வருகிறது.
இதனிடையே அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரமான பாம்பாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து தூவானம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. நீர்வரத்தின்றி காய்ந்து கிடந்த துவானம் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் நின்று தூரத்தில் வெள்ளி கோடுகளாய் தெரியும் அருவியின் அழகை நீண்ட நேரம் பார்த்து ரசிக்கின்றனர். அருகில் சென்று பார்த்து ரசிக்க தகுந்த வழித்தடங்களை வனத்துறையினர் செய்து தரவேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X