என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்ற இளம்பெண் திடீர் மரணம்
Byமாலை மலர்22 July 2021 8:22 AM GMT (Updated: 22 July 2021 8:22 AM GMT)
நெல்லையில் கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்ற இளம்பெண் உயிரிழப்புக்கு தவறான சிகிச்சையே காரணம் என்று கூறி மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
நெல்லை:
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்து கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சுதன் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி இந்துராணி (26).இவர் பட்ட மேற்படிப்பு முடித்துள்ளார்.
இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணமானது. 4 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் உள்ள ஒரு கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெறுவதற்காக வந்தனர்.
கடந்த 19-ந்தேதி இந்துராணியை பரிசோதனை செய்த டாக்டர்கள் நேற்று அவருக்கு கருமுட்டை தொடர்பான சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இந்த சிகிச்சை முடிந்த சில மணி நேரத்திலேயே இந்துராணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் டாக்டர்களின் தவறான சிகிச்சை காரணமாகவே இந்து ராணி இறந்து விட்டதாக கூறி கருத்தரிப்பு மையம் முன்பு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், இழப்பீடாக ரூ.1 கோடி வழங்கினால் மட்டுமே இந்துராணியின் உடலை வாங்குவோம் என்று கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்துராணியின் உடலை பெற்றுக்கொள்வதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்து கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சுதன் (வயது 30). கூலி தொழிலாளி. இவரது மனைவி இந்துராணி (26).இவர் பட்ட மேற்படிப்பு முடித்துள்ளார்.
இவர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணமானது. 4 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையில் உள்ள ஒரு கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெறுவதற்காக வந்தனர்.
கடந்த 19-ந்தேதி இந்துராணியை பரிசோதனை செய்த டாக்டர்கள் நேற்று அவருக்கு கருமுட்டை தொடர்பான சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. இந்த சிகிச்சை முடிந்த சில மணி நேரத்திலேயே இந்துராணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் டாக்டர்களின் தவறான சிகிச்சை காரணமாகவே இந்து ராணி இறந்து விட்டதாக கூறி கருத்தரிப்பு மையம் முன்பு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், இழப்பீடாக ரூ.1 கோடி வழங்கினால் மட்டுமே இந்துராணியின் உடலை வாங்குவோம் என்று கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து இந்துராணியின் உடலை பெற்றுக்கொள்வதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X