என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரத்தநாடு அருகே காட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 5 பேர் கைது
Byமாலை மலர்21 July 2021 11:34 AM GMT (Updated: 21 July 2021 11:34 AM GMT)
ஒரத்தநாடு அருகே காட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே உள்ள வட்டக்கோட்டை நெய்வேலி காட்டாற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக ஒரத்தநாடு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரேசில் பிரேம் ஆனந்த்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவரது தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது நள்ளிரவு நேரத்தில் 4 மாட்டு வண்டி, ஒரு ஆட்டோவில் சிலர் மணல் அள்ளி கொண்டிருந்தனர். இதையடுத்து மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட மாட்டுவண்டிகள், ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நெய்வேலியை சேர்ந்த ராமமூர்த்தி (வயது43), கங்காதாஸ் (42), சிவநேசன் (20), மணிகண்டன் (22), ராஜ்கிரண் (18) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X