search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    தருமபுரி அருகே நிலத்தகராறில் மண்வெட்டியால் தாக்கி அண்ணனை கொன்ற தம்பி

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே நிலத்தகராறில் அண்ணனை கொன்ற தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர்.
    பாப்பாரப்பட்டி:

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கொல்லப்பட்டி கிராமத்தை சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகன் ராஜா, (வயது 55) விவசாயி. இவரது தம்பி அம்மாசி (52).

    இந்த நிலையில் ராஜாவுக்கும், தம்பி அம்மாசிக்கும் இடையே பொது வழிப்பாதை தொடர்பாக நிலத்தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று அம்மாசி தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அண்ணன் ராஜா, தம்பி அம்மாசியிடம் நிலப் பிரச்சனை தொடர்பாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ராஜாவின் தலையில் அம்மாசி மண்வெட்டியால் தாக்கி உள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் ராஜா சாய்ந்தார். இதில் சம்பவ இடத்திலேயே ராஜா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதனைப் பார்த்த அம்மாசி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சௌந்தர்ராஜன் பாப்பாரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட் ராமன் மற்றும் பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கொலையுண்ட ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணனை அடித்து கொன்ற அம்மாசியை கைது செய்தனர்.

    நிலத்தகராறில் அண்ணனை தம்பியே அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×