search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவள்ளூர் அருகே கட்டுமான பொருட்களை திருடிய 2 பேர் கைது

    திருவள்ளூர் அருகே கட்டுமான பொருட்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள சொக்கநல்லூர் எம்.ஜி.ஆர். தெருவைச் சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 66). இவர் தனது வீட்டின் வெளியே இலவச தொகுப்பு வீடுகள் கட்டுவதற்காக இரும்பு கட்டுமான பொருட்கள் வைத்திருந்தார்.

    அது நேற்று முன்தினம் திருட்டுபோனது. இதுகுறித்து சின்னதுரை வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருட்டு போன இரும்பு கட்டுமான பொருட்களை திருடியது கோலப்பஞ்சேரியை சேர்ந்த நகுலன் என்ற காதர் (25) அவரது நண்பரான பிரகாஷ் (20) என தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட 2 பேரையும் கைது செய்து, அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த இரும்பு கட்டுமானப் பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×