என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதல் பிரச்சினையில் வாலிபர் வெட்டிக்கொலை-பொதுமக்கள் மறியல்
Byமாலை மலர்18 July 2021 11:12 AM GMT (Updated: 18 July 2021 11:12 AM GMT)
கோபிநாத் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பதால் அவரை மர்மநபர்கள் கொலை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த வீராட்சி மங்கலம் அரிஜன் காலனியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களது மகன் கோபிநாத் (வயது 20). இவர் திண்டுக்கல் பிரிவில் உள்ள தனியார் அரிசி ஆலையில் லோடுமேனாக பணிபுரிந்து வந்தார். நேற்றிரவு கோபிநாத் உப்பாறு அணை சாலை பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில் இன்று காலை மடத்துப்பாளைம் சாலையில் வெட்டுகாயங் களுடன் கோபிநாத் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். ஆனால் போலீசார் வருவதற்குள் கோபிநாத் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதையடுத்து போலீசார் கோபிநாத் உடலை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கோபிநாத் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. உடலில் வெட்டுக்காயங்கள் இருப்பதால் அவரை மர்மநபர்கள் கொலை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு மற்றும் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், கார்த்தி கேயன் ஆகியோர் சென்று விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கோபிநாத் நேற்றிரவு மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு 2 பேருடன் உப்பாறு அணை பகுதியில் முயல்வேட்டைக்கு சென்றது தெரிய வந்துள்ளது. இதனால் அவருடன் சென்றவர்களே கோபி நாத்தை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து அவருடன் சென்ற நபர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருகி ன்றனர். மேலும் கோபிநாத் வேட்டைக்கு செல்வதோடு மட்டு மல்லாமல் சேவல் சண்டை கட்டுவதிலும் ஈடுபட்டு வந்தார். சேவல் சண்டை போட்டியின் போது அவருக்கும் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந் துள்ளது.
ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று கோபிநாத் தனது குடும்பத்தினருடன் அந்த பெண் வீட்டிற்கு சென்று தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு பெண் வீட்டார் மறுப்பு தெரிவித்து திருப்பி அனுப்பி உள்ளனர். இதனால் காதல் பிரச்சினை காரணமாக கோபிநாத் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கோபிநாத் உடல் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையறிந்து அங்கு வந்த கோபிநாத்தின் உறவினர்கள், கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோரி தாராபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X