search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பொம்மிடி அருகே தம்பதி கொலை வழக்கில் 3 பேர் கைது

    பொம்மிடி அருகே தம்பதி கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொம்மிடி:

    தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பில்பருத்தி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 80). விவசாயி. இவருடைய மனைவி சுலோசனா (75). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர்கள் 2 பேரையும் கடந்த 12-ந்தேதி இரவு மர்ம நபர்கள் படுகொலை செய்தனர். இந்த கொலை குறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜா சோமசுந்தரம், அண்ணாதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், அம்மாதுரை, சிவசங்கரன், கலைவாணி, நவாஸ் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள், கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சரவணன் மகன் ஹரிஷ் (20), அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு பகுதி செயலாளர் ரமேஷ் மகன் வேலவன் (24), முருகன் மகன் சந்துரு (22), நாகராஜன் மகன் எழிலரசன் (26) உள்பட 6 பேர் வயதான தம்பதியை கொலை செய்தது தெரிந்தது.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த ஹரிஷ் உள்ளிட்ட 3 பேரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் வேலவன், சந்துரு எழிலரசன் ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் தம்பதி கொலையில் ஈடுபட்ட 6 பேரும் நகை, பணத்தை கொள்ளை அடிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 12-ந்தேதி இரவு வயதான தம்பதியின் வீட்டுக்கு சென்ற அவர்கள் கிருஷ்ணனை கத்தியால் கழுத்தில் குத்தியும், சுலோசனாவை வாய் மற்றும் மூக்கை பொத்தியும் கொலை செய்துள்ளனர். பின்னர் சுலோசனாவின் கழுத்தில் இருந்த தாலிக்கொடி மற்றும் கம்மல் என மொத்தம் 7½ பவுன் நகைகள், 3 செல்போன்கள், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை அவர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரிடம் இருந்தும் தாலிக்கொடிகள், கம்மல், 3 செல்போன்கள், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×