என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூர் அருகே கடையின் பூட்டை உடைத்து டி.வி.-கேமரா திருட்டு
Byமாலை மலர்16 July 2021 10:17 AM GMT (Updated: 16 July 2021 10:17 AM GMT)
கரூர் அருகே கடையின் பூட்டை உடைத்து டி.வி.-கேமரா திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் அருகே உள்ள கோவிந்தம்பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). இவர் ராமகவுண்டனூர் பகுதியில் போட்டோ ஸ்டூடியோ கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலையை முடித்துவிட்டு இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து நேற்று முன்தினம் காலை மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனையடுத்து கடைக்கு உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான எல்.இ.டி.டிவி மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நிகான் கேமரா உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X