என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்கோவிலூர் அருகே விவசாயி வீட்டில் 14 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்15 July 2021 9:38 AM GMT (Updated: 15 July 2021 9:38 AM GMT)
திருக்கோவிலூர் அருகே விவசாயி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 14 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரகண்டநல்லூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். விவசாயி. இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு புறப்பட்டுச் சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் வெங்கடேசன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 14 பவுன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு மர்ம மனிதர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இன்று அதிகாலை அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்கள் வெங்கடேசன் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் வெங்கடேசனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து வெங்கடேசன் மணலூர்பேட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து பார்த்தார். அங்கு வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. உடனே அவர் பீரோ இருந்த அறைக்கு சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 14 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது.
இதுகுறித்து மணலூர்பேட்டை போலீசில் வெங்கடேசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அந்த பகுதியில் உள்ள பொது மக்களிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மணலூர்பேட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களாக கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் நடந்து வருவதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X