search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டி திருப்பூர் பெண்களிடம் நகை,பணம் பறித்த வாலிபர்

    கடந்த 2019 ம் ஆண்டு 2 பேரின் ஆபாச ‘போட்டோ’வை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க பணம், நகை தேவை என்று 2 பேரையும் மிரட்டியுள்ளார்.
    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்த 19 மற்றும் 22 வயதான சகோதரிகள் இருவருக்கும் கடந்த  2014 ம் ஆண்டு சென்னை குளத்தூரில் உள்ள செல்போன் சர்வீஸ் கடையில் பணியாற்றி வரும் செந்தில்குமார் (வயது 38) என்பவருடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து சகோதரிகள் இருவரிடமும் செந்தில்குமார் ஆசைவார்த்தை கூறி பழகி வந்தார்.மேலும் 2 பேருடன் உல்லாசமும் அனுபவித்துள்ளார்.

    கடந்த 2019 ம் ஆண்டு 2 பேரின் ஆபாச ‘போட்டோ’வை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க பணம், நகை தேவை என்று 2 பேரையும் மிரட்டியுள்ளார்.

    தொடர்ந்து மிரட்டல் விடுத்து பல்வேறு கட்டங்களாக 40 சவரன் நகை, ரூ.25 ஆயிரம் பணத்தை பெற்றார். சகோதரிகள் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்த பின்னும் தொடர்ந்து பணம் கேட்டு செந்தில்குமார் மிரட்டி வந்துள்ளார். 

    இது குறித்து திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சகோதரிகள் புகார் அளித்தனர். மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி மிரட்டல் விடுத்து வந்த செந்தில்குமாரை கைது செய்தனர்.

    மேலும் இந்த வழக்கு திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்திற்கு  மாற்றப்பட்டது. போலீசார் செந்தில்குமார் மீது ‘போக்சோ’ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

    தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடை த்தது. கடந்த 2014 ம் ஆண்டு இணையதள சாட்டிங் மூலம் திருப்பூரை சேர்ந்த  22 வயது இளம்பெண்ணுடன் செந்தில்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் சாட்டிங் மூலம் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். 

    மேலும் தங்களது போட்டோக்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். கோவையில் இருவரும் நேரில் சந்தித்து பேசியதுடன் உல்லாசமாகவும் இருந்துள்ளனர். அதனை செந்தில்குமார் இளம் பெண்ணுக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
     
    கடந்த 2015 ம் ஆண்டு அந்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. கணவர்  வீட்டிற்கு சென்றதால் செந்தில்குமாருடன் சாட்டிங் செய்வதை நிறுத்திக்கொண்டார்.
      
    ஒரு நாள் பெற்றோர் வீட்டிற்கு சென்ற போது தனது தங்கையின் செல்போனில் இருந்து செந்தில் குமாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து செந்தில்குமார் இளம்பெண்ணின் தங்கையுடனும் சாட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளார். 

    அவரையும் வெளியிடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுப வித்ததுடன் அதனையும் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டார். இதனிடையே அவருக்கும் திருமணம் நடை பெற்றது.  

    இந்தநிலையில் சகோதரிகளின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அவர்களது கணவன்கள், 2 பேரிடமும்  விசாரித்த போது செந்தில்குமாருடன் பேசி வந்ததை அறிந்து  அதிர்ச்சியடைந்தனர். இதனால் 2 பேரையும் அவர்களது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விட்டனர்.

    இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட செந்தில்குமார் வேறொரு செல்போன் நம்பர் மூலம் சகோதரிகளை தொடர்பு கொண்டு பேசி, உங்களது  ஆபாச போட்டோக்கள் என்னிடம் உள்ளது. அதனை வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் தனக்கு தேவையான பணத்தை தர வேண்டும் என்று கேட்டுள்ளார். 

    அவர்களை நம்ப வைக்க ஆபாச படத்தை அனுப்பி மிரட்டியுள்ளார். தான் பேசுவது தெரியாமல் இருக்க மாற்றுக்குரலில் பேசியுள்ளார். இது குறித்து சகோதரிகள் 2 பேரும் செந்தில்குமாரிடம் கூறவே அவர் திருப்பூருக்கு புறப்பட்டு வந்ததுடன், நகை, பணத்தை கொடுங்கள். 

    அதனை மிரட்டிய நபரிடம் கொண்டு சென்று கொடுத்து ஆபாச படங்களை  அழிக்குமாறு கூறி விட்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சகோதரிகள் 2 பேரும் தங்களிடம் இருந்த  40 பவுன் நகை மற்றும்  ரூ.25ஆயிரம் பணத்தை செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளனர். 

    இப்படி பலமுறை சகோதரிகள் இருவரிடமும் மாற்றுக்குரலில் பேசி மிரட்டி  நகை-பணத்தை பெற்றுள்ளார். பல முறை வீட்டிற்கு வந்து நகை-பணத்தை  வாங்கி சென்றதால் அவர் மீது சகோதரிகள் 2 பேருக்கும் சந்தேகம் ஏற்பட்டது-. 

    அதன் பிறகே செந்தில்குமார் வேறொரு செல்போன் நம்பர் மூலம்  மாற்றுக்குரலில் பேசி  தங்களிடம்  நகை-பணம் பறித்ததை சகோதரிகள் இருவரும் அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
     
    தொடர்ந்து செந்தில்குமார் மிரட்டி வந்ததால் போலீசில் புகார் செய்தனர். இது போல் செந்தில்குமார் வேறு பெண்கள் யாரையாவது மிரட்டி  பணம்-நகை பறித்துள்ளாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில்  இந்த சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
    Next Story
    ×