search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் வந்த அண்ணாமலைக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்த காட்சி.
    X
    திருப்பூர் வந்த அண்ணாமலைக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்த காட்சி.

    வரும் காலம் பா.ஜ.க.வின் காலம்-அண்ணாமலை பரபரப்பு பேச்சு

    முன்னர் பா.ஜ.க.விற்கு தமிழ்நாடு தேவைப்பட்டது.தற்போது தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க.,தேவைப்படுகிறது என திருப்பூரில் அண்ணாமலை பேசினார்.
    திருப்பூர்:
     
    தமிழக பா.ஜ.க. தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை இன்று காலை கோவையில் இருந்து தனது வரவேற்பு சுற்றுப்பயணத்தை தொடங்கினார். 

    திருப்பூர் வந்த போது அவருக்கு பா.ஜ.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் உண்மையான சித்தாந்தத்தை கொண்ட கட்சி பா.ஜ.க., வேறு எந்த கட்சியும் கொள்கை ரீதியாக நம் அருகாமையில் வர முடியாது. 

    உண்மையான நாட்டுபற்று நம் கட்சியில் தான் உள்ளது. முன்னர் பா.ஜ.க.விற்கு தமிழ்நாடு தேவைப்பட்டது. தற்போது தமிழ்நாட்டிற்கு பா.ஜ.க., தேவைப்படுகிறது.

    நீட் வேண்டாம், புதிய கல்வி கொள்கை வேண்டாம் என்றும், எங்களை தனியாக விட்டுவிடுங்கள் என்றும் தி.மு.க. சொல்கிறது.  ஆட்சியை சரியாக நடத்து கிறார்களா? என்றால் அதுவும் இல்லை.

    தடுப்பூசி செலுத்தும் நிலையங்களில் தி.மு.க., கட்சி துண்டை போட்டுக்கொண்டு தடுப்பூசி டோக்கனை பெற்றுக்கொள்கிறார்கள். சாதாரண மக்களுக்கு தடுப்பூசி வருகிறதா என்றால் இல்லை. 

    தி.மு.க. குடும்பத்திற்கு தடுப்பூசி செல்கிறது. அதை மறைப்பதற்காக மோடி தடுப்பூசி கொடுக்கவில்லை என கூறுகின்றனர்.
     
    அடுத்த 4 மாதத்தில் ஒவ்வொரு பொய்யையும் வேரறுப்போம். மத்திய அரசின் திட்டங்களை அதிகம் பெறும் ஊர் திருப்பூர். அடுத்த 3 வருடங்கள் பா.ஜ.க.வினர் கடுமையாக பணி செய்ய தயாராக இருக்க வேண்டும் . 

    இனியும் பொறுத்திருக்க முடியாது. நாம் ஆட்சிக்கு வந்தாக வேண்டும்.
    உங்களின் தலைவனாக அல்ல. சேவகனாக பொறுப்பேற்கவுள்ளேன். அதிரடியாக அசுரத்தனமாக கட்சியின் வளர்ச்சி இருக்கும். வரும் காலம் பா.ஜ.க.வின் காலம். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×